Translate

Tuesday, October 21, 2008

நன்பர்களே எழுதுங்கள் !!!

நன்பர்களே எழுதுங்கள் !!!
இப்போது, நம் இளைய சமுதாயத்தினர், எழுத்து பணியில் காணமுடிகிறது , 
இது நல்ல தொடக்கம்,
இஸ்லாத்தை பற்றி விமர்சனம்(அவதூறு ) எழுகிறதா... 
கோபம் கொள்ளவேண்டாம், 

நீங்கள் மட்டும் யோக்கியமா என்பது போன்ற கோணத்தில் பதில் செல்லாமல் ,
நிதானமாக, அவர்களுக்கு இஸ்லாத்தில் இருந்து பதில் கொடுங்கள்.... 
அவர்களின் செயல் முற்றிலும் தவறு என்பதை தோலுரித்து கட்டுங்கள்.


நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் திருந்திவிடவா போகிறார்கள் என்று யாரோ கேட்பது புரிகிறது....

விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது ஒரு வகையில் தாவா தான்..
அப்படி நீங்கள் அளிக்கும் பதில் அந்த கேள்வி கேட்டவரின் மனது ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது தானே உங்கள் மனதில் தோன்றும் கேள்வி ?

அவர் மனது இப்போது ஏற்றுகொள்ளது, 
அனால் கவனிக்கவேண்டிய விஷயம் ... 

அவர்மனதில் அவரின் விமர்சனத்துக்கான விடையை அவர் மனதில் பதிவு செய்துவிட்டோம், 

நமக்காகவும் அவர் சார்ந்த சமுதயதுக்காகவும் ஏற்றுகொள்ள மறுக்கிறார் அவ்வளவே !

அனால், மீண்டும் இதே தவறை [விமர்சனம்(அவதூறு )] அவர் செய்ய நினைக்கும் பொது அவர் சற்று தயங்குவார், இது நிச்சயம் .


அதுமட்டுமல்லாது ,இப்படிப்பட்ட எழுத்து மூலம் கொடுக்கும் பதிலை, 

நேரடியாக விவாதம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட ,வெறும் பார்வையாளர்கலாக இருந்து படித்துவிட்டு செல்பவர்களின் , எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் .

ஆகையால் , எழுத பழகுங்கள். 
உங்களின் எழுத்து, பதில் அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் அமைத்துகொள்வது அவசியம் .

இந்த எழுத்து தாவா ! மென்மேலும் பெருக, நமது இளைய சமுதாயம் , முன்வரவேண்டும் .

எல்லாம் வல்ல அந்த ஏக அல்லாஹுவின் , கூலி கிடைக்க கைகோர்ப்போமாக!



No comments: