Translate

Saturday, March 28, 2009

இணை வைத்தல் கொடியது

ஐந்து வேளைத் தொழுகையை விட தர்ஹாக்களில் கையேந்துவதை புனிதமாகக் கருதுபவர்கள். பாத்திஹாக்கள் ஓதி இறைவனின் அன்பைப் பெற்றுவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். என்னிடமே கேளுங்கள் என்று இறைமறையில் அல்லாஹ் சொல்லும் வாக்குகளை பொய்யாக்குபவர்களாக நமது அறியாமையினால் அவுலியாக்களிடம் சென்று கேட்கக்கூடியவர்களாக இருக்கிறோம். சிலை வணக்கங்களையும்; கப்று வணக்கங்களையும் ஒழிக்க ரசூல் (ஸல்) அவர்கள் பட்ட சிரமங்களை மறந்தவர்களாக. ரசூல் (ஸல்) அவர்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கூட மதிக்காதவர்களாக நாம் அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்திற்கு கடுமையாக ஊறு விளைத்துக் கொண்டிருக்கிறோம்;. சிந்தித்து திருந்துவோமா.
1. தான் பணக்காரனாக வேண்டும் , வீடு வாங்க வேண்டும் , தன் குடும்ப சிக்கல்கள் தீர வேண்டும் என்பதற்காக காஃபிரான சாமியார்களிடம் தன் குடும்பப் பெண்களைக் கூட அழைத்துச் சென்று குறி பார்ப்பது.அவன் மந்திரித்துக் கொடுக்கும் தாயத்துகளை அணிந்தும் , சாம்பிராணி , மற்ற படைத்தப் பொருள்களை உண்டும் , கபட சாமியார்கள் எழுதித்தரும் தகடுகளை வீடுகளில் மாட்டி வைத்தும்; அல்லாஹ்வுக்கு இனைவைக்கும் கொடுமையான செயல்களை செய்ய தயங்குவதில்லை.  

2. நம் தாத்தா, பாட்டன் என்று குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஹஜ்ரத்தை வைத்து ஓதி விட்டால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் என்று 3ம் நாள் பாத்தியா 7 ம் நாள் பாத்தியா 40 ம் நாள் பாத்தியா என்றும் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து விமரிசையாக செய்கிறோம். இதன் மூலம் ஹஜ்ரத்கள்தான் கொஞ்சம் வயிறார உண்டு கையில் கொஞ்சம் காசு பார்த்து விட்டு நமக்கு பாவச்சுமையை இணைவைத்தலின் மூலம் அதிகமாக்கி விட்டுப் போகிறாரே தவிர. யார் செய்த பாவத்தையும் ஹஜ்ரத் ஓதும் பாத்தியா,மொளலூது, ஹத்தம் எதுவும் இறைவனிடம் காப்பாற்றாது. அவனவன் செய்த பாவத்திற்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். நாம் செய்த நல்ல அமல்கள் கூட வரும். ஹஜ்ரத்களின் பாத்தியாக்கள் கூட வராது. பாத்தியாக்கள் பாவத்தை கூட்டி விடும்.  

3. தர்ஹாக்களில் தவம் கிடக்கிறோம். தர்ஹாக்களுக்கு செல்வதை இஸ்லாம் ஆதரிப்பதாய் இருந்தால் இன்று ரசூல் (ஸல்) அவர்களுக்குதான் பெரிய தர்ஹா இருந்திருக்க வேண்டும். தர்ஹாக்கள் பொய்யானவை என்பதற்கு நிறைய ஆதாரம் இருந்தும் நாம் இந்த மார்க்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயலை ஒரு மார்க்க கடமை என்று செய்து வருகிறோம். தர்ஹாக்களை அண்டிப் பிழைத்து வாழும் ஒரு கூட்டம் நன்றாக செழிப்பாகி வருகிறது. நம் பெண்கள் கூட்டமும் தர்ஹா கூட்டங்களில் கண்டவர்களிடமும் இடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தர்ஹாக்கள்,மௌலுது,ஹத்தம் பாத்தியா, பூரியான் பாத்தியா,ஒடுக்கத்து புதன், 3,7,40 பாத்தியா...போன்றவைகள் பொய், பித்தலாட்டம், தனிப்பட்ட நபர்கள் பையை நிரப்பிக் கொள்ள மார்க்கம் என்ற பெயரில் புகுத்தப்பட்டவைகள் என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றது. இவைகள் எல்லாம் உண்டு மார்க்கம் அனுமதிக்கிறது என்பதற்கு மௌலூது, பாத்தியா ஒதி நவீன பிச்சை எடுக்கும் சில ஹஜ்ரத்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிருபிக்கத் தயாராய் இருக்கிறார்களா முன் வருவார்களா. நிச்சயம் வர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பிழைப்பு கெட்டு விடும். அந்நிய கலாச்சாரத்திலிருந்து நமக்கு தொற்றிய நோய் இது. 

அவர்கள் கருமாதி, திவசம் செய்கிறார்கள் 
நாம் 3,7,40...பாத்தியா என்று நிறைய வெரைட்டி பாத்தியா உண்டு.

அவர்கள் கோயிலுக்குப் போனால் 
நாங்க பள்ளிக்குப் போய் தொழ மாட்டோம் மாறாக தர்ஹாவுக்கு தவறாமல் போவோம்.

அவர்கள் தேர் இழுத்தால் 
நாங்கள் சந்தனக் கூடு...

பேர் மட்டும் அப்துல்லா(அப்துல்லா:அர்த்தம் - அல்லாஹ்வின் அடிமை ) பாக்கி எல்லாம் அவர்கள் செய்வதை பேர் மாற்றி செய்யும் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி வருகிறோம்;.
நம் மார்க்கத்தையே மரணிக்கச் செய்யும் செயல்களை இங்கு பார்ப்போம். இஸ்லாத்தை முறிக்கும் காரியங்கள் ,
.1. அல்லாஹ்வை வணங்கும் கடமைகளில் அவனுக்கு இணை வைப்பது அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க(வே) மாட்டான் இதனைத்தவிர(மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்' (2 : 48)
மரணித்தவர்களிடம் (அவர்களை அழைத்துப்) பிரார்த்தனை செய்வதும் அவர்களைக் கொண்டு உதவி தேடுவதும், அவர்களுக்காக நேர்ச்சை செய்வதும், அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலில் நின்றுமுள்ளது.
2. யார் தனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் இடைத்தரகர்களை ஏற்படுத்தி, அவர்களை அழைத்து அவர்களிலேயே நம்பிக்கையும் வைக்கின்றானோ அவன் ஏகோபித்த முடிவின் படி காஃபிராகி விட்டான்.
3. இணை வைப்பவர்களை யார் காஃபிர்களாக கணிக்கவில்லையோ, அல்லது குப்ரில் சந்தேகம் வைக்கின்றானோ, அல்லது அவர்களுடைய மார்க்கம் சரி என கருதுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான்
4.யார் நாயகம் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தை சிறந்ததாகக் கருதுகின்றானோ, அவன் காபிராகிவிட்டான்.
5. நாயகம் (ஸல்) அவர்களுடைய மார்க்கத்தில் ஏதாவதொன்றை வெறுத்த நிலையில் அமல் செய்தால் அவன் திடமாக காபிராகிவிட்டான். திருமறை இவ்வாறு கூறுகிறது. 'இது (ஏனெனில்) அல்லாஹ் இறக்கி வைத்ததை நிச்சயமாக அவர்கள் வெறுத்து விட்டார்கள் என்ற காரணத்தினாலாகும். ஆதலால் அவர்களுடைய செயல்களையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் அழித்து விட்டான்.' (47:9)
6. நாயகம் (ஸல்) அவர்களுடைய தீனில் ஏதாவதொன்றை யார் பரிகாசம் செய்கின்றானோ அவன் காபிராகிவிட்டான். திருமறையில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் '(அதற்கு நபியே அவர்களிடம்) அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள் என்று நீர் கேட்பீராக. ( 9 : 65 )
7. சூனியம் செய்தல், யார் சூனியம்;; செய்கின்றானோ, அல்லது அதைப் பொருந்திக் கொள்கின்றானோ அவன் காபிராகிவிட்டான். திருமறை கூறுகிறது. ' மேலும் அவ்விருவரும், நாங்கள் சோதனையாக இருக்கிறோம் ஆதலால் (இதைக்கற்று) நீ காபிராகிவிட வேண்டாம் ' என்று கூறும் வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக்கொடுப்பதில்லை ' ( 2 : 102 )
8. முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்ரிக்கீன்(காபிர்)களோடு தோளோடு தோள் நின்று உதவி செய்தல் திருமறை கூறுகிறது ' உங்களில் எவரேனும் அவர்களை (த்தனக்கு) ப்பாதுகாவலராக்கிக் கொண்டால். அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம். ( 5 : 51 )
9. மனிதர்களில் நின்றும் சிலர் (தரீக்கா, சூபிய்யாக்களுடைய ஷேய்க் மார்களைப் போன்றவர்கள்) உயர்ந்த அந்தஸ்து அடைந்து விட்டார்கள் அவர்கள் நபியவர்கள் மார்க்கத்தை பின் பற்றத் தேவையில்லை அவர் அதிலருந்து வெளியாகலாம் என்று யார் கருதுகின்றானோ அவன் காபிராகிவிட்டான். திருமறை கூறுவதாவது: ' இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்.' (3 : 85)
10. அல்லாஹ்வுடைய தீனைக் கற்றுக்கொள்ளாமலும் அதன்படி அமல் செய்யாமலும் அதைப் புறக்கணித்து விடுவது. திருமறை கூறுகிறது. 'மேலும் தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்நினைவு படுத்தப்பட்டு அதன் பின்னர் அவைகளைப் புறக்கணித்து விடுகிறவனைவிட மிக அநியாயக்காரன் யார் ? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை (அவர்களின் முந்திய பாவத்திற்காக ) தண்டிக்கக்கூடியவர்களாவோம் ( 32 : 22 )
அல்லாஹ்விற்கு கோபத்தை உண்டாக்கும் இணை வைத்தல் எனும் மன்னிக்க முடியாத குற்றத்திற்கு ஆளாகாமல் நாம் ஒவ்வொருவரும் நம்மையும், நம் குடும்பத்தினரையும் காத்து இஸ்லாம் தடுப்பவைகளிலிருந்து விலகியும் நன்மைகள் செய்பவர்களாகவும் விளங்குவோம்.

No comments: