Translate

Wednesday, July 22, 2015

கிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி இளம் பெண் கற்பழிப்பு : தீர்வு தான் என்ன?

செய்தி :
கிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி   இளம் பெண் கற்பழிப்பு

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். இவரது சபைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்துவிட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தனர்.

என்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்துவதாக கூறி பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்து விட்டார்.மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார். அவரது தொந்தரவு அதிகமானதால் எனது உறவினர்களிடம் எனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.

பிரச்சனையின் ஆணிவேர் 

இந்த பாதிரியார் ஒழுங்கா கல்யாணம் பண்ணி இருந்தா இந்த கேடுகெட்ட நிலக்கு தள்ளப்பட்டு இருக்க வேண்டியதில்லை , 

ஒருமுறை சிக்கிய பெண் , அவளை மிரட்டி பலமுறை சீர்அழித்து இருக்கும் மனோநிலை துறவறம் என்ற விடயத்திற்கு சம்பந்தம் இல்லாத விடயம். 

இந்த பெண் வெளியே சொல்லிவிட்டாள் ,  அதனால்  வெளியே வந்து விட்டடது ,   இன்னும் சொல்லாத ஏராளமான அப்பாவிகள் பாதிக்கபட்டுகொண்டு தான் இருப்பார்கள், வெளியில் சொல்லாத வரை.

துறவறம் என்று சொல்லிக்கொண்டு , அடுத்தவர்களின் (அப்பாவி  பெண்களின் ) வாழ்க்கை சீரழித்துக்கொண்டு இருப்பது தடுக்கப்படவேண்டும் ,

நிதர்சனமாக பார்த்தால் உயிர்கள் ஜோடியாக தான் படைக்க பட்டிருகின்றார்கள் , அவர்கள் ஜோடி இல்லாமல் வாழ்வது (துறவறம்) நிதர்சனத்தில் செயல்படுத்த கடினமான விடயம். 

 துறவறம் இருக்கின்றேன் என்று சொல்லிகொள்ளும் ஒவ்வொருவரின் பின்புலத்தை ஆராய்ந்தால் , பல விடயங்கள்  துறவறத்துக்கு சம்பந்தமில்லாத (திரைமறைவில்) இருபது புலப்படும் .

உயிரினம் இயற்கையாகவே தன் எதிர் பாலினத்தை ஈர்க்கும் விதமாக படைக்கப்பட்டு இருகின்றது , என்பதனை மறந்து இயற்கைக்கு எதிராக துறவறம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் இப்படிதான் ஒரு நாள் இல்லை மறுநாள் ,குட்டு வெளிப்பட்டு கேவலப்பட்டு நிற்க வேண்டும். 

இது மட்டும் தான பிரச்சனை? , இல்லை !!!!, இது பிரச்சனையின் ஒரு காரணி மட்டுமே !!!!

  • ஆணும் பெண்ணு தனித்து இருப்பது அல்லது தனித்து இருக்கும் சூழலில் சிக்கிகொல்வது,( இந்த செய்தியில் அப்படிப்பட்ட சூழல் திட்டமிட்டு உருவாக்கபட்டுள்ளது )
  • கவனத்தை ஈர்க்கும் வகையில்  உடை ( அரைகுறை ஆடை  /உடலமைப்பு தெரியும் வண்ணம் இறுக்கமாக) அணிவது 
  • பெண்கள் சக ஆண்களிடம் குழைந்து பேசுவது 
  • இன்னும் பல , 

ஒரு ஐ.ஏ.ஸ் பெண் அதிகாரிக்கு நடந்த மற்றுமொரு சம்பவத்தை பார்த்தால் புரியவரும், 

ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது.
அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )

பெண்களே ! மதத்தின் பெயரால் குருட்டு நம்பிக்கை கொண்டு தனி பூஜை பிரார்த்தனை என்று அதீத நம்பிக்கை வைக்காமல் ,பெண்கள் தங்களை சமயோசிதமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.

இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.

மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா ? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா?

இதற்கு தீர்வு தான் என்ன :

கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.

மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.

ஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை

ஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை தான் பலரும் தவறாக பயன்படுத்திக்கொள்ள துணிகின்றனர்.
பல கோணங்களில் பலவிதமான தவறுகள் வெளிவருவதை செஇதிகலாகா தினமும் படித்துகொண்டு தான் இருகின்றோம் .

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.


அடுத்த தீர்வு :  

பெண்கள் மற்ற ஆண்களுன் எந்த தருணத்திலும் ,தனித்து இருக்க கூடாது 

பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே யதார்த்த நிலை.

பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று
தினமனி கதிரில் (4-2009-ல்) பெருமூச்சு விட்டிருந்தார்
-ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.

ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது 

இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது


பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக ,கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.

இப்பொழுது இருக்கும் சட்டதினால் இன்றைய நிலை ,
நாளையும் தொடர்ந்துகொன்ன்டு தான் இருக்க போகின்றது , 

இஸ்லாம் சொல்லும் தீர்வை செயல்படுத்தினால், நாளைய சமுதாயமாவது இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடும்.


No comments: