Translate

Monday, February 23, 2009

இன்ஷ்யூரன்ஸ்! இஸ்லாத்தின் பார்வையில்

இன்ஷ்யூரன்ஸ் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் மூலதனங்கள் யாவும் வட்டியின் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றுவது வட்டிக்குத் துணை செய்வதாகவே கொள்ளப்படும்.

மேலும் இன்ஷ்யூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க ஒரு சூதாட்டமேயாகும். பலரிடம் பணம் வசூல் செய்து யார் இடையிலே இறந்து விடுகிறானோ அல்லது இழப்புக்கு ஆளாகிறானோ அவனுக்குப் பலரது பணமும் போய்ச் சேருகின்றது.

''ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.''

(அல்குர்ஆன் 5:90)

மற்ற சூதாட்டங்களில் வென்றவன் மற்றவர்களின் பணத்தை அடைகின்றான். இந்த சூதாட்டத்தில், இறந்தவனும், இழந்தவனும் அடைகின்றான். மனிதனுடைய உயிரையும், உடமையையும் பணயமாக வைத்து விளையாடப்படும் சூதாட்டத்திற்கு எந்த முஸ்லிமும் துணை போகக் கூடாது.

No comments: