Translate

Monday, February 16, 2009

இஸ்லாமிய அழைப்புப்பணி

டாக்டர் ஜாகீர் நாய்க் அவர்கள் ஒற்றுமை 
இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி

   

    இஸ்லாத்தைப் பற்றித் தவறான பல கருத்துக்கள் குறிப்பாக செய்தி ஊடகங்களால் பரப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கருத்துகள் திணிக்கபடுகின்றன. இச்சூழலில் நாம் மதி நுட்பத்துடன் அழைப்புப் பணிச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். சாதாரணமாக முஸ்லிம்களாகிய நாம் அழைப்புப் பணிச் செய்யும்போது, கருத்துகளை பூசி மெழுகும் பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளை மதி நுட்பத்தைப் பயன்படுத்தி கலைக்கும் பணியை நாம் மேற்கெள்ள வேண்டும்.

    உதாரணமாக முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் மக்கள் கூறும்போது, நான் "அடிப்படைவாதி" என்பவன் யார் என்ற கேள்வியை எழுப்புவேன். அடிப்படைவாதி என்பவர் ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது நம்பிக்கையின் அல்லது படிப்பின் அடிப்படைகளை பின்பற்றுபவர் ஆவார். உதாரணமாக ஒரு மருத்துவர் நல்ல மருத்துவராக இருக்கவேண்டும் எனில் மருத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அதனை செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதியாக இருக்காவிடில், அவர் ஒரு நல்ல மருத்துவராக இருக்க முடியாது. என்னை பொருத்தவரை ஒரு முஸ்லிம் அடிப்படைவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஏனெனில் நான் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அவற்றை பின்பற்றுபவனாக இருக்கிறேன். மனித குலத்திற்கு எதிரான ஏதாவது ஒரேயொரு அடிப்படை அம்சத்தை சுட்டிக் காட்டுமாறு இஸ்லாத்தை விமர்சிப்போருக்கு நான் சவால் விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி தெரியாத ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படை அம்சங்களை மனித குலத்திற்கு எதிரானது என்று எண்ணலாம். ஆனால் அவரது சந்தேகங்களுக்கு அறிவுப் பூர்வமாக விளக்கம் அளித்தால், எந்தவொரு மனிதராலும் மனித குலத்திற்கு எதிரான ஒரேயொரு விஷயத்தைக் கூட இஸ்லாத்தில் சுட்டிக்காட்ட முடியாது.

    அடிப்படைவாதி என்பதற்கு பொருள், பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவர் என்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி கூறுகின்றது. ஆனால் ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பை நீங்கள் படித்தால் இந்த பொருளில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். புதிய பதிப்பில் பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றில் குறிப்பாக இஸ்லாத்தின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவரே அடிப்படைவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்லாம் என்ற வார்த்தை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே "அடிப்படைவாதி" என்ற சொல்லை கேள்விப் பட்டவுடனேயே, முஸ்லிமைப் பற்றிய எண்ணம் தான் ஒருவரது எண்ணத்தில் வரும். முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி, பயங்கரவாதி என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

    பயங்கரவாதி என்பவன் அப்பாவி மக்களை கதிகலங்க வைப்பவன் என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். இந்த அடிப்படையில் எந்தவொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. எந்தவொரு அப்பாவியையும், எந்தவொரு சமயத்திலும் முஸ்லிம் ஒருவர் கதிகலங்க வைக்கக் கூடாது. சமூக விரோதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து முஸ்லிம்கள் கதிகலங்க வைக்கவேண்டும். இப்படியே நாம் விரிவாக விளக்கிக் கொண்டே போகலாம். எனவே மதி நுட்பத்துடன் நாம் கருத்துகளை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.


    இளைஞர்களை பொருத்தவரையில், இஸ்லாத்தின் சத்தியச் செய்திகளை எடுத்துரைக்க அவர்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என்று விரும்பியதற்குக் காரணம் மருத்துவப் பணி ஒரு உன்னதமான பணி என்பதால் தான். ஆனால் அதனைவிட சிறந்த பணியை பின்னர் நான் கண்டேன்.

    திருக்குர்ஆனில் இறைவன்:

    (41:33) وَمَنْ اَحْسنُ قَوْلا ًمِّمَّنْ دَعَآاِلىَاللهِ وَعمِلَ صَاِلحا ًوَّقَالَ اِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ

    எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல)அமல்கள் செய்து: "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று  கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)

    எனவே மருத்துவப்பணியைவிட சிறந்த பணியாக அழைப்புப்பனி தென்பட்டபோது நான் அதனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் வெட்கமடையத் தேவையில்லை. முஸ்லில்லாதவர்களின் உள்ளத்தில் உள்ள தவறான எண்ணங்களைப் போக்க நாம் மதி நுட்பத்துடன் முயற்சி செய்ய வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற போர்வையில் கடினப்போக்கை மேற்கொள்ளாமல் அன்புடனும் கணிவுடனும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே நாம் பணியாற்ற வேண்டும்.

No comments: