Translate

Showing posts with label வேளாண்மை. Show all posts
Showing posts with label வேளாண்மை. Show all posts

Monday, August 4, 2014

வேளாண்மையும் நிலக் குத்தகையும்

2320.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.  என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.  வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்