Translate

Saturday, March 28, 2009

குழந்தைகளுக்கு இஸ்லாத்தை சொல்லி கொடுப்போம் . பாகம் 1

நம் இஸ்லாமிய குழந்தைகள் , 
பிற மதத்தவர் நடத்தும் பள்ளி கூடங்களுக்கு சென்று திரும்பியவுடன் , கிருத்துவ பாடல்களையோ அல்லது ஹிந்து பஜனைகலையோ பாடுவதை கேட்டல், நம்மில் பலர் கோபப்படுவதுண்டு. நம் குழந்தைகளுக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லித்தராமல் போவது தான் , இந்த நிலைக்கு காரணம். !

பாடினால் , கோபம் கொண்டு அது எல்லாம் தப்பு என்று மட்டும் குழந்தைகளின் வாயை அடைக்க பார்க்கிறோம் .இது குழந்தைகளின் மனதில் மற்று அபிப்பிராயத்தை பதித்துவிட கூடாது , 

அனைத்து மதத்தினரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் , ( இப்படி பட்ட பஜனை / கிருத்துவ பாடல்கள் அனைத்து மத குழந்தைகளுக்கும் கட்டாயம் சொல்லிகொடுப்பது தவறு என்ற கருத்து வேறு!..) நம் குழந்தைகள் எது சரி எது தவறு என்ற என்னத்தை மனதில் பதிய வைத்து விட்டால், நம் குழந்தைகள் ஆரம்பம் முதல் தெளிவான இஸ்லாத்தில் காலூன்ற தொடங்கும், 

சரி , குழந்தைகள் மனதில் எளிதில் புரிய வைக்கும் படி , எப்ப சொல்லி கொடுக்கலாம்,

அதன் ஒரு தொடக்கமாக ,எளிதான கேள்வி பதில் முறையை பார்போம் .

கேள்வி : 01 உன்னைப் படைத்தவன் யார்? என்னைப் படைத்தவன் அல்லாஹ்
கேள்வி : 02 உன்னுடைய தாய் தந்தையரைப் படைத்தவன் யார்? என்னுடைய தாய் தந்தையரைப் படைத்தவனும் அல்லாஹ் தான்.
கேள்வி : 03 இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் படைத்தவன் யார்? அல்லாஹ் தான் இரவையும் பகலையும் படைத்தான். அல்லாஹ் தான் சூரியனையும் சந்திரனையும் படைத்தான்.
கேள்வி : 04 நாம் நடந்து திரிகின்ற இந்தப் பூமியைப் படைத்தவன் யார்? நாம் நடந்து திரிகின்ற இந்த பூமியைப் படைத்தவனும் அல்லாஹ் தான்.
கேள்வி : 05 மலைகளைப் படைத்தவன் யார்? மலைகளைப் படைத்தவன் அல்லாஹ்.
கேள்வி : 06 வானத்தில் தவழும் மேகக் கூட்டத்திலிருந்து மழையை இறக்கியருளியவன் யார்? அல்லாஹ் தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்தான்.
கேள்வி : 07 மரங்களையும் அது தரும் கனிவர்க்கத்தையும் படைத்தவன் செய்கின்றவன் யார்? அல்லாஹ் தான் மரங்களையும் அது தரும் கனி வர்க்கத்தையும் படைத்தான்.
கேள்வி : 08 நாம் பார்க்கின்ற அனைத்தையும் படைத்தவன் யார்? அல்லாஹ் தான் நாம் பார்க்கின்ற அனைத்தையும் படைத்தான்.
கேள்வி : 09 நமக்கு உணவையும், குடிப்பையும் படைத்தவன் யார்? அல்லாஹ்!
கேள்வி : 10 சூரியனை உதிக்கச் செய்பவனும், அதனை மறையச் செய்பவனும் யார்? அல்லாஹ்!
கேள்வி : 11 வானவில்லைப் படைத்தவன் யார்? அல்லாஹ்!
குறிப்பு : இந்த உலகையும் அதில் உள்ள அத்தனை படைப்பினங்களையும் படைத்தவன் அல்லாஹ்! அவன் தான் நமக்குத் தேவையான அனைத்தையும் தந்தான், அவன் தான் அனைத்தையும் பாதுகாக்கின்றான், அனைத்தும் அவனுக்கு உரியவைகளாகத் தான் இருக்கின்றன. இது தான் ரப் என்ற பதத்திற்குரிய அர்த்தமும், விளக்கமுமாகும், இதனை குழந்தைகள் மனதில் எளிதாக பதிய வைத்துவிடலாம் .

No comments: