Translate

Friday, August 15, 2014

அல்லாஹ் சுபஹானஹுதாலாஹ் கூறம் ஒற்றுமை எது

அல்லாஹ் சுபஹானஹுதாலாஹ்  கூறம் ஒற்றுமை எது


மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். ( 7:3) 

நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (3:103)


ஓர் ஊரில் அனைவரும் 
 
வரதட்சணை வாங்கினால், அல்லது அனைவரும் மது அருந்தினால் , 
அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா?
என்று கூட சிந்திக்க மாடீர்களா?.



நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால்,
 
இதுவல்ல அல்லாஹ் கூறும் ஒற்றுமை .

அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும் 
 
தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் 
 
பிடியுங்கள் என்று தான் அல்லாஹ்  திருமறையிலே கூறுகின்றான் .
'குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால்
ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்' சொல்லாமல் ஒற்றுமையாக இருங்கள் என்றால் அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கு முரணான போலி ஒற்றுமை தேவை இல்லை .
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது.

அவர்களையும் 

பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

No comments: